search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெர்மனி கால்பந்து அணி"

    ஜெர்மனி கால்பந்து அணியின் மூத்த வீரரான மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். #MarioGomez
    பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் மரியோ கோமஸ்.

    ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி அணியில் மரியோ கோமஸ் இடம்பிடித்திருந்தார். இவருடன் பல முன்னணி அனுபவ வீரரகள் இடம்பிடித்திருந்தனர். உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழும்பியது.



    அந்த அணியின் முன்னணி வீரரான மெசுட் ஒசில் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் 33 வயதாக மரியோ கோமஸும் ஓய்வு பெற்றுள்ளார்.

    2007-ல் இருந்து ஜெர்மனி அணிக்காக விளையாடி வந்த கோமஸ் 78 போட்டிகளில் விளையாடி 31 கோல் அடித்துள்ளார். தனது ஓய்வு குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கோமஸ், ‘‘தற்போது நான் ஓய்வு முடிவை அறிவிக்கும் நேரமாகும். இது திறமையுள்ள ஏராளமான இளைஞர்களுக்கு, அவர்களுடைய கனவை நனவாக்க வாய்ப்பாக அமையும்’’ என்றார்.
    இனவெறி தாக்குதல் நடைபெற்றதாக ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற மெசுட் ஒசிலை துருக்கி அதிபர் பாராட்டியுள்ளார். #MesutOzil
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் 2014 சாம்பியனான ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது. ஜெர்மனி அணியில் 29 வயதான மெசுட் ஒசில் இடம்பிடித்திருந்தார். இவரது பூர்வீகம் துருக்கியாகும். உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்திருந்தார்.

    இந்த போட்டோவை வெளியிட்டு ஜெர்மனி அணிக்காக விசுவாசமாக விளையாடினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அணியின் முதன்மை அதிகாரிகளில் சிலர் எர்டோகனுடன் சந்தித்தது குறித்து விளக்கம் கேட்டிறிந்தனர்.

    இதனால் மனமுடைந்த மெசுட் ஒசில் ஜெர்மனி அணியில் அருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ‘‘நான் மெசுட் ஒசில் உடன் போனில் பேசினேன். அவருடைய அறிக்கை முழுவதும் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இருந்தது. இது பாராட்டக்கூடிய நடத்தையாகும். நான் ஒசிலின் கண்களில் முத்தமிட்டேன்’’ என்றார்.



    மேலும், ‘‘ஜெர்மனி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஒரு இளைஞருக்கு எதிரான இதுபோன்ற இனவெறியை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.

    அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
    ஜெர்மனி கால்பந்து அணியின் அட்டக்கிங் மிட்பீல்டரான மெசுட் ஒசில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #MesutOzil
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறிது.

    இதனால் ஜெர்மனி வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது. குறிப்பாக 29 வயதாகும் மெசுட் ஒசில் மீது வார்த்தை தாக்குதல் நடத்தப்பட்டது. மெசுல் ஒசிலின் பூர்விகம் துருக்கியாகும். கடந்த மே மாதம் அவர் துருக்கி அதிபரை சந்தித்திருந்தார். இதுகுறித்த படத்தை வெளியிட்டு, ஜெர்மனிக்கு விசுவாசமாக ஒசில் விளையாடினாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டகப்பட்டது.



    இந்நிலையில் தன்மீது இனவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும், அவமதிப்பு செய்ததாகவும் உணர்கிறேன். இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
    உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு தொடக்க சுற்றோடு வெளியேறிய வரலாற்றில் இருந்து ஜெர்மனி தப்புமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அடுத்த சுற்றுக்கு அந்த அணி முன்னேறுமா? என்ற அச்சத்தில் ஜெர்மனி அணி உள்ளது.

    பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் அணிகள் கோப்பையை வென்ற அடுத்த வருடம் தொடக்க சுற்றோடு வெளியேறின. இந்த மோசமான சாதனையில் ஜெர்மனி சேர்ந்து விடக்கூடாது என ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால்தான் ரசிகர்களின் இந்த நினைப்பிற்குக் காரணம்.

    ஜெர்மனி இடம்பிடித்துள்ள குரூப் ‘எஃப்’ பிரிவில் மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா அணிகள் இடம்பிடித்துள்ளன. ஜெர்மனி தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவிடம் 0-1 என வீழ்ந்தது. இதனால் அந்த அணிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் 2-வது ஆட்டத்தில் ஸ்வீடனை 2-1 என வீழ்த்தியது.

    இந்த பிரிவில் நான்கு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. மெக்சிகோ இரண்டு வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனி தலா ஒரு வெற்றி, தோல்வி மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ஸ்வீடன் தலா ஒரு வெற்றி, தோல்வி மூலம் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தென்கொரியா இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    இன்று நான்கு அணிகளும் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகின்றன. மெக்சிகோ ஸ்வீடனையும், ஜெர்மனி தென்கொரியாவையும் எதிர்கொள்கின்றன. ஜெர்மனி தென்கொரியாவை கட்டாயம் வீழ்த்தியாகவே வேண்டும். அப்போதுதான் நாக்அவுட் சுற்றை எதிர்பார்க்க முடியும். அதேவேளையில் ஸ்வீடன் மெக்சிகோவை வீழ்த்திவிட்டால் ஜெர்மனிக்கு கோல் அடிப்படையில்தான் வாய்ப்பு கிடைக்கும்.



    ஜெர்மனிக்கு இருக்கும் பிரகாசமாக வாய்ப்பு, மெக்சிகோ ஸ்வீடனை வீழ்த்த வேண்டும். அதேவேளையில் ஜெர்மனி தென்கொரியாவிற்கு எதிராக வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டும். இல்லையெனில் தொடக்க சுற்றோடு வெளியேற வெண்டியதுதான்.

    பிரான்ஸ் 1998-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2002-ல் தொடக்க சுற்றோடு வெளியேறினார். இத்தாலி 2006-ல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2010-ல் தொடக்க சுற்றோடு வெளியேறியது. ஸ்பெயின் 2010-ல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2014-ல் தொடக்க சுற்றோடு வெளியேறியது.
    முந்தைய உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஹீரோவான கோட்சேவுக்கு தற்போதைய ஜெர்மனி அணியில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.#MarioGotze
    பெர்லின்:

    32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஜெர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை பயிற்சியாளர் ஜோசிம் லோ நேற்று வெளியிட்டார்.

    ஜெர்மனி அணி 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. இதில் கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்த நடுகள வீரர் 25 வயதான மரியோ கோட்சே இந்த உலக கோப்பைக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். அவர் போதிய பார்மில் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் ஜோசிம் லோ விளக்கம் அளித்தார்.

    அதே சமயம் செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் சில தினங்களுக்கு முன்பு பயிற்சிக்கு திரும்பிய கோல் கீப்பரும், கேப்டனுமான மானுல் நியர் உத்தேச அணியில் 4 கோல் கீப்பர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். ஆனால் பயிற்சி முகாமில் அவர் தனது உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இறுதி கட்ட அணியில் நீடிப்பார். தாமஸ் முல்லர், மேட்ஸ் ஹம்மல்ஸ், மரியோ கோம்ஸ், சமி கேதிரா, டோனி குரூஸ், மெசூத் ஒஸில் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    இதற்கிடையே ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவின் ஒப்பந்த காலம் 2020-ம் ஆண்டில் இருந்து மேலும் இரண்டு ஆண்டுக்கு (2022-ம் ஆண்டு வரை) நீடிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

    போர்ச்சுகலின் முதற்கட்ட அணியில் பேபியோ கோயன்ட்ராவ், ரெனட்டோ சாஞ்சஸ் ஆகியோருக்கு இடம் இல்லை. அதே சமயம் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ, நானி, பெப்பெ, வில்லியம் கர்வல்ஹோ, ஜோவ் மவ்டினோ உள்ளிட்டோர் அணியில் தொடருகிறார்கள்.

    இதே போல் அர்ஜென்டினாவின் உத்தேச அணியில் லயோனல் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, கோன்சலோ ஹிகுவைன், ஏஞ்சல் டி மரியா போன்ற முன்னணி வீரர்கள் இடத்தை தக்கவைத்து இருக்கிறார்கள்.

    5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் நம்பிக்கை வீரர் 26 வயதான நெய்மார் அந்த அணிக்கு திரும்பியுள்ளார். கால்முட்டி காயத்தால் விலகிய மூத்த வீரர் டேனி ஆல்வ்சுக்கு பதிலாக டேனிலோ சேர்க்கப்பட்டு இருக்கிறார்.#MarioGotze
    ×